திருகோணமலையில் கர்ப்பிணிகளை தாக்கும் புதிய காய்ச்சல்-7மாத கர்ப்பிணி தாய் உயிரிழப்பு!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட இருவர் நேற்று உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேர் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் திருகோணமலை – நித்தியபுரி, முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 31 வயதுடைய எஸ். அகிலவாணி எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை நிலாவெளி இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தோட்டம் பகுதியை சேர்ந்த இருவர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.