யாழில் கையும் களவுமாக பிடிப்பட்ட அதி பயங்கர பொருள்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் Browns ice போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டத்தரிப்பு பகுதியில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பண்டத்தரப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் 85g Browns ice எனப்படும் அதி சக்தி வாய்ந்த போதைப்பொருளுடன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.

யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக இந்த தைப்பொருள் கைது செய்த சம்பவம் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

பண்டத்தரிப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.