யாழில் 6 பேருக்கு ஆபத்தாக மாறிய மர்ம வாகனம்! மடக்கி பிடித்த இளைஞர்கள்

யாழில் இன்றைய தினம் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை இளைஞர்கள் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்தி பிடித்துள்ளனர்.

யாழ்.சுண்டுக்குளி பகுதியில் விபத்தை ஏற்படுத்திய குறித்த கார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

அதனை அவதானித்த இளைஞர்கள் காரை துரத்திய போது அங்கிருந்து நல்லூர், முடாமவடி, கோப்பாய் பகுதிகளில் ஆறு விபத்துக்களை ஏற்படுத்திய குறித்த காரை இனுவில் புகையிரத நிலைய பகுதியில் நிறுத்தி விட்டு அதன் சாரதி தப்பிசென்றுள்ளார்.

குறித்த விபத்துக்களில் குடும்ப பெண்ணொருவர், சிறுமி உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து காரினை மீட்டு சென்றுள்ளனர். சாரதியை தேடும் முயற்சிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.