பதவியை இழந்தார் சம்பந்தன்!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை புதிய எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று கூடியபோது பிரதி சபாநாயகர் இந்த விடயத்தை சபையில் அறிவித்தார்.

வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமானது.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான அறிவித்தல் வெளியாகி உள்ளது.

அதற்கமைய இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற சர்ச்சைக்கு சபாநாயகர் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளமை குறித்தக்கது.