யாழ் வைத்தியில் இப்படி ஒரு அவலம்!! காத்துக் கிடக்கும் மக்கள்..

யாழில் வைத்திய சான்றிதழ் பெறுவதற்காகத் தேசிய போக்குவரத்து வைத்திய நிலையத்திற்கு முன்னால் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.

சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வைத்திய சான்றிதழ் பெறுவதற்கு யாழ். தேசிய போக்குவரத்து வைத்திய நிலையத்துக்கு செல்லும் மக்கள் ஒரு நாள் காத்திருந்து வைத்திய சான்றிதழை பெற்றுச் செல்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் அதிகாலை 5 மணிக்கு சென்நு இடம்பிடிக்க வேண்டியுள்ளதாகவும்

அன்றைய தமது கடமைகள் தடைப்படுவதாகவும். வேலை விடுமுறை எடுத்துச் சென்று நிற்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் இதில் கவனம் எடுத்துக் குறித்த நடைமுறையை இலகுபடுத்துமாறு கேட்டு நிற்கின்றனர்.