வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்கள் 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு….

வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்கள் 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு….

புங்குடு தீவு மகாவித்தியாலய மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்துறை நீதி மன்றத்தில் இடம்பெற்றது கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்ட 12 பேரில் இருவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஏனைய 10 பேரும்  ஊர்காவற்துறை நீதவானின் முன்  முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இவர்கள் 10 பேரையும் எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் றியால் உத்தரவிட்டார்..