மாணவிகள் மீது சேட்டை விட்ட இளைஞர்களை நையப்புடைத்த பொதுமக்கள்!!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பகுதிநேர வகுப்புக்குச் செல்லும் மாணவிகள் மீது மிக நிண்ட கும்பல் ஒன்று அநாகரிகமான முறையில் செயற்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாணவிகள் மீது அவதூறாக நடக்க முற்படுகையில் இன்று மாலை அக்கும்பலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

மாணவிகள் மீது அவதூறாக செயற்பட்ட 4 பேர் கொண்ட அக்கும்பலை அப்பகுதி பொதுமக்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொலிசார் 4 பேருக்கும் எச்சரிக்கை வழங்கிவிட்டு அப்பகுதியைச் சேர்ந்த கிராம சேவகரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இளைஞர்களின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை வழங்கி, இளைஞர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி விட்டு கிராம சேவை உத்தியோகஸ்த்தர் அவர்களை பெற்றோரிடம் அனுப்பி வைத்துள்ளார்.