ஹிஸ்புல்லாவினால் முழுமையான முடங்கி போன கிழக்கு மாகாணம்!

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியினை மாற்றம் செய்யக் கோரி பூரண ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் மூலமாக ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு அமைய மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருமலை ஆகிய மாவட்டங்களில் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இன்று காலை மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் டயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது.

பொஸிஸாரின் தலையீட்டால் மீண்டும் போக்குவரத்து வழமை நிலைக்கு நிரும்பியுள்ளதுடன் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண ஆளுநராக தற்போது ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஹர்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.