இராணுவத்தையும் பொலிசாரையும் இறக்குங்கள்! அதிரடி காட்டும் மகிந்த

போதைவஸ்து மையமாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தங்குமிடமாகவும் தற்போது இலங்கை மாறி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கூறுகையில்,இந்த நிலையில் போதைவஸ்து தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்காமல் பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கு எதிராக பொலிசாரும், படையினரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.