இலங்கையில் பிரித்தானியப் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்! மது போதையால் ஏற்பட்ட விபரீதம்

மாத்தறை, வெலிகம, மிரிஸ்ஸ கடற்பரப்பில் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் அதிக மதுபோதையில் இருந்த இவர் சுகயீனமடைந்த நிலையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

52 வயதுடைய வின்பர்க் மீசேல் என்ற குறித்த பெண், 25 வயதுடைய தனது காதலனுடன் மிரிஸ்ஸ கடற்கரையில் இருந்துள்ளார்.

திடீரென அவர் சுகயீனமடைந்தார். இந்த நிலையில், அவசர அம்புலன்ஸ் சேவை உதவியுடன் மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற பின்னர் உயிரிழந்துள்ளார்.

சடலம் மரண பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.