லண்டனில் திருமணம் செய்த வவுனியா பெண் காதலனிற்காக எடுத்த திடீர் முடிவு

லண்டனில் வவுனியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வருட இறுதியில் நடைபெற்றுள்ளது,

வவுனியாவில் வசித்து வந்த இளம்பெண்ணொருவர் அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பெற்றோர்கள் குறித்த காதலை எதிர்த்ததுடன், நாங்கள் சொல்லும் மணமகனை நீ திருமணம் செய்யாவிடில் நாங்கள் தற்கொலை செய்துவிடுவோம் என மிரட்டி யாழை சேர்ந்த தற்போது லண்டனில் வசித்துவரும் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து கடந்த ஜப்பசி மாதம் லண்டனுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்நிலையில் அவருடன் ஒருமாதம் சுமூகமாக வாழ்ந்து வந்த நிலையில் தனது காதலை மறக்க முடியாத வலியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மாப்பிள்ளையின் குடும்பத்தினரால் இறுதி நேரத்தில் காப்பாற்றப்படடுள்ளார்.

இந்த விடயத்தை அறிந்த அவர் உடனடியாக வீட்டுக்கு வந்து அந்தப்பெண்ணிடம் தற்கொலைக்கான காரணத்தை வினவிபோது தான் காதலித்த விடயத்தை கூறியுள்ளார் அந்தப்பெண்.

உடனடியாக செய்வதறியாது அதிர்ச்சிக்குள்ளான அவர், சில தினங்களுக்கு பின் நன்றாக ஜோசித்து ஒரு முடிவுக்கு வந்தார், முடிவின் பலனாக தனது மனைவியை வவுனியாவிற்கு கூட்டிக்கொண்டு வந்து நடந்ததை பெண்ணின் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு அங்கேயே அந்தப்பெண்ணை விட்டிட்டு லண்டன் சென்றுள்ளார்.

குறித்த சம்பவத்தால் பெண்ணின் குடும்பத்தார் கடும் அதிருப்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.