பேருந்து நிலையத்தில் தனிமையிலிருந்த சிறுவன் பொலிஸ் நிலையத்தில்!!

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற சிறுவனொருவனை பேருந்து நிலைய நேரக்கணிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுவன் ஒருவனை வவுனியா சாலையின் இ.போ.ச நேரக்கணிப்பாளர் அழைத்து விசாரித்துள்ளார்.

இதன்போது வீடு செல்வதற்கு செட்டிகுளத்திலிருந்து தனியார் பேருந்தில் வந்ததாகவும், தனது பெயர் மயில்வாகனம் சுகாதாரன் (10 வயது) என தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த சிறுவன் தனது வீடு கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவன் தற்போது வவுனியா சிறுவர் பெண்கள் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சிறுவனைப் பற்றிய தகவல் தெரிந்தால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.