ஜேர்மனில் சிக்கிய இலங்கை தமிழர்….. டக்ளசை கொலை செய்ய முயற்சி!

விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை சம்பவத்தில் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு ஜேர்மனி உள்ள 39 வயதுடைய நவநீதன் என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையின் பின்னர் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் தொடர்பிலான விபரங்களை தமது தனியுரிமை சட்டங்கள் காரணமாக வெளியிடாத அந்நாட்டு அதிகாரிகள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பின் அங்கத்தவர் என்றும் கொலை மற்றும் கொலை எத்தனிப்பு சம்பவங்களுடனும் அவர் தொடர்புடையவர் எனவும் தெரிவித்துள்ளது.

அத்தோடு குறித்த நபர் மீது 2005 ஓகஸ்ட் இல் வெளியுறவு அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் கொலையுடன் சம்பந்தப்பட்டமை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.