நுவரெலியாவாக மாறிய யாழ். குடாநாடு! கடும் குளிரில் தவிக்கும் தாயக மக்கள்

யாழ்ப்பாண மாவட்டம் நுவரெலியா போன்று கடந்த இரவு மற்றும் காலைப் பொழுதில் மிக கடுமையான குளிர் நிலவியுள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் பனிக்காலம் நிலவிவரும் நிலையில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவிவருகிறது.

இன்று காலை வேளையில் யாழ்ப்பாணத்தில் 18°c வெப்பநிலை நிலவியுள்ளது.

இலங்கயின் குளிர் மாவட்டம் எனப்படும் நுவரெலியாவின் சாதாரண வெப்பநிலைப் இன்று யாழ்ப்பாணத்திலும் பதிவாகியுள்ளது.

அத்துடன் பல பிரதேசங்களிலும் கனத்த பனி மூட்டம் நிலவியதுடன் காலையில் பாடசாலைகள் மற்றும் தொழில்களுக்குசய செல்வோர் சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக கூறப்பட்டுள்ளது.