இலங்கை தென்பகுதியில் பொலிஸ் அதிகாரியினால் நபர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு தலைகவசமின்றி மோட்டார் சைக்கிளில் பொலிஸாரின் கட்டளைகளை புறக்கணித்து பயணித்த நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து பொலிஸார் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவிவருகின்றது.
குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கோரியும் அதனை பொருட்படுத்தாமல் சென்றுள்ள நிலையில் மீக நீண்ட தூரம் சென்று பிடித்ததாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.