தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு! கொலையா? தற்கொலையா?

ஏறாவூரில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் கலைமகள் வீதியை சேர்ந்த சிகை அலங்கார கடையில் பணிபுரிந்து வந்த முஹமட் அறபாத் என்ற 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இன்று காலை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்படடுள்ளார்.

தற்கொலை செய்தமைக்கான காரணம் வெளிவராத நிலையில் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என குடும்ப உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.