தலைக்கவசம் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வலம் வரும் பௌத்த பிக்கு

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி நகர பகுதியில் பௌத்த மதகுரு ஒருவர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் வீதியில் பணிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பௌத்த மதகுரு இன்றைய தினம் தலை கவசம் அணியாமல் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சென்றதாக பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவித்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.