இலங்கையில் பேருந்தில் பயணித்தவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

கண்டி – கொட்டப்பொல பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீப்பிடித்துள்ளது.

கண்டியிலிருந்து – கம்பளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஹெலிஓயாவிற்கும் பேராதனைக்கும் இடைப்பட்ட கொட்டப்பொல பகுதியிலே தீப்பிடித்துள்ளது.

பஸ்ஸில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.