பாடசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டால் பரபரப்பு…..விரைந்த பொலிஸார்

அஹூங்கல்ல பிரதேசத்தில் பாடசலை விளையாட்டரங்கில் இருந்து கை குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை செயலிழக்க செய்வதற்காக காவற்துறை அதிரடி படை பிரிவின் குண்டு செயலிழப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த பாடசலையில் பாதுகாப்பு சுவர் ஒன்றை அமைத்து கொண்டிருந்த சில தொழிலாளர்களால் குறித்த கை குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.