வவுனியாவில் வீதியில் திரும்ப முற்பட்டவருக்கு நடந்த விபரீதம்

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மேசன் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி சென்ற வேன் வாகனம் புளியங்குளம் முத்துமாரி நகருக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்திருந்த நிலையில் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் புளியங்குளம் முத்துமாரிநகரை சேர்ந்த கந்தசாமி சத்தியநாதன் வயது 48 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது. வேன் சாரதி கைதுசெய்யபட்டுள்ளதுடன் புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.