வீட்டில் தனிமையில் இருந்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம்! அதி தீவிர சிகிச்சை பிரிவில்

வவுனியா – மடுக்கந்தை, மயிலங்குளம் பகுதியிலுள்ள வீட்டில் நேற்று மதியம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 16 வயது பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குறித்த மாணவி சமைப்பதற்காக சமையலறைக்கு சென்று அடுப்பினை உபயோகித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவத்தின் பின் பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக அயலவர்களால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மாணவியின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.