கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பொருளால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆபத்தான பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

75 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 கிலோ கிராம் கொக்கொய்னை கடத்த முற்பட்ட வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெவிலியா நாட்டைச் சேர்ந்த நபரை, விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரின் பயண பையில் சூட்சுமமான முறையில் ஒழித்து வைத்து கொக்கொய்ன் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.