என்னது கார்த்தியின் ஜோடியாக ஜோதிகாவா? இதுதான் முதல்முறை

நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவின் நடிப்பில் கடைசியாக காற்றின் மொழி படம் வெளியாகியிருந்தது. அடுத்ததாக தனது கணவரின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இதற்கு அடுத்ததாக நடிகரும் தனது கணவரின் சகோதரருமான கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாரம், ஜோதிகா.

தற்சமயம் கைதி என்ற படத்தில் நடித்துவரும் கார்த்தி அடுத்ததாக ரொமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுடன் ஒரு படமும், பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப்புடன் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.

இதில் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் தான் கார்த்தியுடன் ஜோதிகா நடிக்கவுள்ளாராம். ஆனால் ஜோடியாகவா அல்லது முக்கிய வேடத்திலா என்பது தெரியவரவில்லை.