யாழில் முதாட்டிக்கு உறவினர் செய்த கொடூரம்! வீதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீதியில் நடந்து சென்ற மூதாட்டியைத் தாக்கிவிட்டு அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உறவினர் ஒருவரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் கொடிகாமம் எருவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியையான மூதாட்டி கொடிகாமத்தில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.

அயலவர்களால் மீட்கப்பட்ட மூதாட்டி சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.