கொழும்பின் புறநகர் பகுதியில் ஏழு பெண்களின் முகம்சுழிக்க வைக்கும் செயல்!! பொலிசார் அதிரடியாக கைது..

கிரிபத்கொடை – மாகொலை பகுதியில் ஆயுர்வேத தசைபிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

மஹர நீதவான் நீதிமன்றின் அனுமதிக்கமைய நேற்றைய தினம் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே குறித்த விபசார விடுதி சப்புகஸ்கந்த காவல் துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது விடுதியின் முகாமையாளராக கடமையாற்றிய பெண் ஒருவர் உள்ளிட்ட 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அநுராதபுரம், காலி, மொனராகலை மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளை சேர்ந்த 25 முதல் 35 வயது எல்லைக்குட்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 ஆயிரம் ரூபாய் வரை நாளாந்த வருமானமாக கிடைக்கப்பெறுவதாகவும், வழிநடத்தி சென்ற முகாமையாளருக்க நாளொன்றுக்கு 1300 ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட எழுவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் அவர்களை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.