நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை உயர்கிறது!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 137 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 157 ரூபாவாகும்.

ஒடோ டீசல் லீற்றரொன்றின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , ஒடோ டீசலின் புதிய விலை 104 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் லீற்றரின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 134 ரூபாய் என நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.