யாழில் குளிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் குளிக்கச் சென்ற குடும்பத் தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், சாட்டிக் கடற்கரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

‘கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது அவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டார்.

அவருக்கு கடற்படையினர் உடனடியாக முதலுதவிகளை மேற்கொண்டனர். உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டனர்.

இருந்த போதும் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது’ என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.