உணவு பொதியில் சிக்கிய மர்மம்! யாழில் தாய் செய்த அதிர்ச்சி செயல்

மகனுக்கு வழங்க எனக் கொண்டு சென்ற உணவுப் பொதியில் கஞ்சா போதைப்பொருளை மறைத்துக் கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில் வயோதிபத் தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்காக தாய் இந்த செயலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை சந்திக்க அவரது தாயாருக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அனுமதி வழங்கப்பட்டது.

அவரிடம் இரண்டு உணவுப்பொதிகள் இருந்தன. அவற்றைச் சோதனையிட்ட போது ஒன்றில் சுமார் 100 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது.

வயோதிபப் பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரை பொலிஸார் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் போதே நீதிவான் அவரை விளக்கமறியிலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.