கிளியில் யுவதியிடம் அநாகரிமாக நடந்துகொண்ட ரயில் நிலைய ஊழியர்!

மேடை பற்றுச்சீட்டு எடுக்கத் தவறிய பெண்ணை, ரயில் நிலைய ஊழியர்கள் சிலர் அநாகரீகமான முறையில் நடத்திய சம்பமொன்று, கிளிநொச்சியில், இன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி ரயில் நிலையத்துக்கு தனது தாயாரை அழைத்துக்கொண்டு வந்த குறித்த பெண், ரயிலில் தாயாரை ஏற்றிவிட்டு திரும்பும் போதும், அங்கிருந்த ரயில் நிலைய ஊழியர் ஒருவர், “மேடை ரிக்கட் எங்கே?” என வினவியுள்ளார்.

இதன்போது, தான் மேடை ரிக்கட் எடுக்கவில்லையென்றும், குறித்த நடைமுறையை தான் அறிந்திருக்கவில்லையென்றும் தெரிவித்த குறித்த பெண், இயலாத தாயை ரயிலில் ஏற்றிவிடவே உள்ளே வந்ததாகவும் கூறினார்.

இதன்போது அங்கிருந்த மற்றுமோர் ஊழியர், தகாத வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்து, 3,020 ரூபாயை அபராதமாகச் செலுத்துமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, குறித்த பெண், அபராதத் தொகையைச் செலுத்திவிட்டுச் சென்றுள்ளார்.