விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட இந்தியா! ஜெனிவாவில் நடிகர் கருணாஸ்

இலங்கைக் கடற்பரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வரைக்கும் இந்தியாவிற்கு பெரும் பாதுகாப்பாக இருந்தது என்பது தான் வரலாற்று உண்மை. அதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது என நடிகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 40ஆவது மனிதவுரிமைகள் மாநாட்டின் தமிழர் தரப்பு களமிறங்கி பேசிவருகின்றன. இதில தமிழகத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் விசேட நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் பேசியதாவது,