எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் தடை

கிளிநொச்சி – கரைச்சி பிரதேசசபையின் எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாசகம் பெறுதல் மற்றும் வழங்குதல் தடை செய்யப்படவுள்ளது.

இந்த தடையானது எதிர்வரும் 01.04.2019ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவிக்கையில்,

கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அமைவாக கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் யாசகம் பெறல் மற்றும் யாசகத்தை ஊக்குவித்தல் தடை செய்யப்படவுள்ளது.

இந்த தடையால் யாசகம் செய்பவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என கருதுபவர்கள் பிரதேசசபையின் தலைமை செயலகத்தில் பதிவு செய்ய முடியும்.

இதன் மூலம் அவர்களுக்கான நல்வழிகளை காண்பிக்கும் நடைமுறையும் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.