தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி சினிமா பிரபலங்கள் சிலர் மீது பாலியல் புகார்களை கூறி பிரபலமானவர். தமிழ் சினிமாவில் கூட ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவித்திருந்தார்.
தற்சமயம் சிறிது அடங்கியிருந்தாலும் தனது ஹாட்டான போட்டோஸ், வீடியோக்களை வெளியிட தவறுவதில்லை. இந்நிலையில் அஜித்தை பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், அஜித்தின் படத்தை பார்க்காமல் நான் உறங்க செல்ல மாட்டேன். அவர் தமிழ்நாட்டில் நம்பர் 1 ஹீரோ. சர்ச்சைகளில் இருந்து அவர் விலகியே இருப்பார். மிகவும் தன்மையாக பேசக்கூடியவர்.
குடும்பத்தை மதிக்கும் மனிதர் அஜித். தனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறார். மிகச் சிறந்த மனிதர். சிறந்த கணவர், சிறந்த தந்தை. கோடிக்கணக்கான பெண்களின் இதயங்களை திருடியவர். என் தலை உங்கள் காலில் தல என பதிவிட்டுள்ளார்.