வீதியோரங்களில் உள்ளூர் உற்பத்திகளான குளிர்பான வகைகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.
தற்போதைய வெயில் காலத்தில் வீதியோரங்களில் செல்வோர் நலன்கருதி பலர் உள்ளூர் தயாரிப்பானகுளிர் பானவகைகள் வகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் நோய்கள் பரவக்கூடிய அபாயம் உள்ளதால் அவ்வாறு உள்ளூர் தயாரிப்புகளை வீதியோரங்களில் விற்பனை செய்வதை நிறுத்து மாறும் தவறின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளனர்.