ராஜிவ் காந்தி வழக்கில் சிக்கிய போராளி உட்பட 7 பேர் விடுதலை? வழக்கில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு விடுதலை கிடையாது என்றும் ஏழுபேர் விடுதலை குறித்துக் கூறப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடுங்கள் என்றும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மாநில அந்தஸ்தில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரான தமிழிசை சௌவுந்திரராஜனுக்கு டில்லியின் கொள்கைகள் தெரியாது.

இதுகுறித்து டில்லிதான் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.ஏழு பேர் விடுதலைக்கு டில்லி இணங்காது எனத் தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, அவர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.