O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிப்பு…

2018 கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகள் அடுத்த வாரத்துக்குள் வெளியாகவுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், சனத் பூஜித இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தரப்பரீட்சைகளுக்காக 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், 4 ஆயிரத்து 661 நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றன.