யுத்தம் நடந்த போது கூட நாங்கள் அப்படிச் செய்யவில்லை! மகிந்த ராஜபக்ச

எமது ஆட்சிக் காலத்தில் யுத்தம் இருந்த போதும் மின் வெட்டை நடைமுறைப்படுத்தவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கம்பொல நகரில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

தமது ஆட்சிக் காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதிலும், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் அமைத்தோம். அவ்வாறு அமைக்க வில்லையென்றிருந்தால், இப்போது மக்கள் இருளில் மூழ்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றார்.