6, 56, 641 பரீட்சார்த்திகள் தோற்றின சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாக உள்ளன

2018 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளுக்கான பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி அன்று வெளியிட கூடியதாக இருக்கும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் தற்பொழுது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் 6, 56, 641 பரீட்சார்த்திகள் தோற்றினர். நாடு முழுவதிலும் இடம்பெற்றிருந்த 4661 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது