பலாலியில் காணி அபகரிக்க திட்டம் போட்டுக் கொடுக்கும் மாவை!

யாழ்ப்பாணம் – பலாலி விமானத் தளத்தில் வெகு விரைவில் தமது விமான சேவைகளை இந்தியா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பலாலி விமான நிலையத்தில் அடுத்த மாதத்தில் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு இந்தியா முன்வந்திருந்தது.

எனினும் நாட்டில் புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்த காரணத்தினால் பிற்போடப்பட்டதாகவும் அதனால் மிகவிரைவில் விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறினார்.