தமிழ் கட்சிகளை ஒரே கொள்கையின் கீழ் கொண்டுவர முடியாமல் போய்விட்டது

தமிழ் மக்களது யுத்தம் மற்றும் அரசியல்தீர்வு சார்ந்த விடயங்களில் தமிழ் கட்சிகளை ஒரே கொள்கையின் கீழ் கொண்டுவர முடியாமல் போய்விட்டதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விடயங்களை ஐக்கியநாடுகளின் பாதுகாப்பு சபைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தமிழ் மக்கள் தங்களது அரசியல் தீர்வு எவ்வாறானதாக அமையவேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.