வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல இலங்கை பாடகர்!

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும் போதை பொருள் வர்தத்கருமான மாகந்துரே மதுஷூடன் அண்மையில் டுபாயில் வைத்து கைதான பிரபல இளம் பாடகர் நதிமால் பெரேரா இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் டுபாயிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நதிமால் பெரேராவை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நதிமால் பெரேராவுடன் மற்றுமொரு நபரும் இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 6.15 அளவில் நதிமாலும், லலித் குமார என்ற நபரும் விமான நிலையம் வந்தடைந்தனர் எனவும் அவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நதிமால் பெரேரா பிரபல பாடகர் அமல் பெரேராவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.