சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை!

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலிற்கு ஆயுள் தண்டனையை உறுதி செயத்து உச்ச நீதிமன்றம்.

சரவணபவன் உணவக மேலாளரின் மகளான ஜீவஜோதி இவரின் கணவர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர் என்பவரை 2௦௦1-ம் ஆண்டு, ஜிவஜோதியை மறுமணம் செய்ய வற்புறுத்தி அவரின் கணவர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ரை கடத்திச் சென்றதாகவும், கொடைக்கானானில் வைத்து அவரை கொலை செய்ததாகவும் ராஜகோபால் மீது கொலை குற்றம், ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்ட நிலையில்,

இந்த மனுமீதான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டி இன்று நடைபெற்ற விசாரணையில் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.