யாழில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

யாழ்ப்பாணத்தில் வாளுடன் நடமாடிய நபர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை வாளால் வெட்ட முற்பட்ட போது அயவர்கள் ஒன்று கூடி குறித்த நபரை மடக்கிப் பிடித்தனர்.

குறித்த நபர் காங்கேசந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.