தமிழர் பகுதியில் உயிருடன் மனிதனை கொடூரமாக எரித்தவரின் புகைப்படம் வெளியானது

மது போதையில் கொலை செய்த நபர் வாழைச்சேனையில் நேற்றய சம்பவத்தில் கெலை செய்து உயிருடன் எரியூட்டிய இரக்கமற்ற கொலைகாறன் வைத்திய சிகிச்சை காக விசேட பாதுகாப்புடன் அழைத்துச் செல்லபடுகிறார்.

கொலையாளியை பாதுகாப்பது கருணை காட்டுவது நியாயமற்றது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணமாக உள்ளது.

சட்டத்தின் படி தீற்பு வழங்கப்படும் வரை ஒருவர் குற்றவாளியல்ல என்பதன் அடிப்படையிலேயே இவருக்கான அடிப்படை பராமரிப்பு வழங்கப்படுவதாக பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.

இது போன்ற சம்பவம் நடை பெறாத வண்னம் குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்?

கால்களைக் கட்டி நண்பனை பெற்றோல் ஊற்றி எரிந்த சக நண்பன்

தனது நண்பனின் கால்களைக் கட்டி பெற்றோல் ஊற்றி தீவைத்த சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இது தொடர்பில் தெரிய வருவதாவது…

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் தனது நண்பரொருவர் மீது பெற்றோல் ஊற்றி தீயிட்டதில் குறித்த நபர் தீப்பற்றி எரிந்து கருகி உயிரிழந்துடன் தீயிட்டுக் கொளுத்திய நண்பரையும் கல்குடத பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கண்ணகிபுத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் என்பவரே இவ்வாறு எரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் .

விநாயகபுரம் 9 ஆம் குறுக்கு வீதியில் மதுபோதையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பையடுத்து உயிரிழந்த நபர் வீதியில் கீழே வீழ்ந்ததையடுத்து அவர் மீது பெற்றோலை ஊற்றி தீவைத்துள்ளதாகவும் அவர் தீயில் எரிந்து கருகி உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தீயிட்டவர் தப்பியோட முயற்சித்தபோது பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்த நிலையில் அவரை பொலிஸார் பொதுமக்களிடம் இருந்து மீட்டெடுத்து கைதுசெய்தனர்.

கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பாலசுப்பிரமணியம் ரஞ்சன் என்பரே சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

பதை… பதைக்கும் சம்பவம்! இலங்கையில் தமிழர் பகுதியில் சற்றுமுன் ஆண் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரம்…

நடு இரவில் பெரும் அட்டூளியத்தால்…நடு வீதிகளில் பதறும் தமிழ் பெண்கள்!