கடன் கொடுத்ததால் தற்கொலை செய்துகொண்ட தமிழ் குடும்பம்; அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய பேரதிர்ச்சி சம்பவம்!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் சேலத்திலே குறித்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.,

கொடுத்த கடனை வசூலிக்க முடியாததால்தான் இவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன,

சம்பவம் தொடர்பில் மேலும்.,

சேலம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 77). இவரது வீடு இன்று காலை வெகுநேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அயலில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிவராமன், அவரது மனைவி புஷ்பா (66), மகன் பாபு (42) ஆகிய 3 பேரும் வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர்.

இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதறி அழுதனர், இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால் ஏராளமானோர் அங்கு திரண்டனர், இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே 3 பேரின் உடலையும் மீட்ட பொலிசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

சிவராமன் ரூ. 5 லட்சத்திற்கும் மேல் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கு கடன் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர்கள் முறையாக பதில் சொல்லாமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.

ஏற்கனவே பாபுவுக்கு கண் பார்வை குறைபாடால் 42 வயதாகியும் இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கொடுத்த பணத்தையும் வசூலிக்க முடியாததால் குடும்பத்துடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.