மட்டக்களப்பில் லண்டன் தமிழ் வைத்தியருக்கு நேர்ந்த கதி

வைத்தியரின் நாயை திருடிய திருடியவனை துரத்தி பிடிக்க சென்ற வேன் கொள்ளையனை தப்ப விட்டு விட்டு தூணில் மோதிய பரிதாப சம்பவம் சித்தாண்டி பகுதியில் இடம் பெற்றது.

சந்திவெளி பகுதியில் பல ஏக்கர் தோட்டம் வைத்திருக்கும் லண்டனை சேர்ந்த ரவிக்குமார் எனும் வைத்தியரின் நாயை திருடன் திருடிச்சென்றதை அவதானித்த வைத்தியர் தமது வாகனத்தை அதி வேகத்துடன் சித்தாண்டியை நோக்கி துரத்திய போது வேன் தூணில் மோதி விபத்திற்குள்ளானது.

எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இவ் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஏறாவுர் பொலிசார் விசாரனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரனை முடியும் வரை எவ்வித கருத்தும் சொல்ல முடியாது என பொலிசார் தெரிவித்தனர்.