சற்றுமுன் ரணிலின் இருப்பிடத்தில் நடந்த பயங்கரம்; அதிரடிப்படை காவலனின் அதிர்ச்சி முடிவு!

அலரிமாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த STF அதிகாரி ஒருவர் இன்று காலை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவர் தனக்கு வழங்கபட்ட உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையின் முன்னால் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த முடிவுக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை என்று பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.