யாழில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி – கொடிகாமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் துன்னாலை வடக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் 18 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில், மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளகிய நிலையில். அதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். எனினும் பின்னிருக்கையில் பயணித்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.