நீரில் மூழ்கி பலியான சகோதரிகள் – காணொளி

அலவ்வ – வலகும்புர பிரதேசத்தில் மாஓயாவில் நீராடி கொண்டிருந்த வேளை ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அலவ்வ – போரமடல பகுதியை சேர்ந்த 14 வயதான இனோகா சச்சினி மற்றும் 11 வயதான திரோஸா ஜிமேஷிகா என்ற இரண்டு சிறுமிகளே நேற்று மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தனது தந்தையுடன் அவர்கள் இருவரும் நீராட சென்ற போது நீரில் மூழ்கியுள்ளனர்.

பின்னர் பிரதேசவாசிகள் குறித்த இருவரையும் மீட்டு பொல்காவில மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.