தப்பி தவறி கூட பூஜையறையில் இதனை மறந்தும் செய்துவிடாதீங்க

ஆன்மீகப்படி பூஜை அறையில் சில செயல்களை நாம் எப்பொழுதுமே செய்யக்கூடாது. மீறி செய்து விட்டால் துன்பம் வந்து சேர்ந்துவிடும் என்று சொல்லப்படுகின்றது.

தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

  • விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.
  • விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது. நெய் விளக்கு எண்ணெய் வேப்ப எண்ணெய் இலுப்பை எண்ணெய் தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால் தேவியின் அருளும் மந்திர சக்தியும் கிடைக்கும்.
  • வீட்டு பூஜை அறையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது நாம் அணைக்கக் கூடாது..
  • வீட்டின் நிலைகளில் குங்குமம் மஞ்சள் வைக்க வேண்டும் இதனால் தீய சக்திகளும் விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
  • அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும் பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.
  • எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
  • ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும் வியாதியும் நெருங்காது.
  • சனிபகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
  • வீட்டில் பூஜை அறையில் தெய்வப்படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.
  • நம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.