வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

யாழ்தீபம் இணையத்தள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!…

– பிரதம ஆசிரியர் –
யாழ்தீபம்.

”பார விகாரிதனில் பாரண நீருங்குறையும்மாரியில்லை வேளாண்மை மத்திமமாம் – சேரார்பயம் அதிகம் உண்டாம் பழையோர்கள்சம்பாத்திய உடைமை விற்றுண்பார் தேர்.”

வருடப்பிறப்பு : 14.04.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை,
மு.ப 9.12 மணி தொடக்கம், பி.ப 5.12 மணிவரையும்.

மருத்து நீர் தேய்க்கும் நேரம் : 2019.04.14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
மு.ப 9.12 மணி தொடக்கம், பி. ப 5.12 மணி வரையும்.

மருத்து நீர் தேய்க்கும் போது : தலைக்கு – ஆலிலை
காலுக்கு – இலவமிலை
திசை – கிழக்கு

ஆடையின் நிறம் : வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை சிவப்புக்கரை வைத்த ஆடைகள்

சேர்க்க வேண்டிய உணவுகள் : சுக்கு, திப்பிலி, மிளகு, திரிகடுகு, சேர்த்த உணவுகளுடன் அப்பம்